முதல்வர் , அமைச்சர் மீது ஊழல் புகார் வந்தால் அதனை முதன்மை செயலாளர் விசாரிப்பார் என ஒரு அரசாணை போடப்பட்டு இந்த புகார் அவருக்கு அனுப்பப்பட்டது.
ரேசன் அரிசி , எல்.ஈ.டி பல்பு வாங்கியதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் , மற்றும் உணவுத்துறை உள்ளாட்சித்துறை அமைச்சார்கள் மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் இயக்குனரிடம் அளித்த புகாரில், ஒரு அரசாணையை காரணம் காட்டி இதுகுறித்து விசாரணைக்கு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அந்த அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக புகார் அளித்துள்ள திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தெரிவித்துள்ளார் .