முதல்வர் மீது வழக்குப் போட்டால் நீதிமன்றம் விசாரிக்காதா? புதிய அரசாணை

 




முதல்வர் , அமைச்சர் மீது ஊழல் புகார் வந்தால் அதனை முதன்மை செயலாளர் விசாரிப்பார் என ஒரு அரசாணை போடப்பட்டு இந்த புகார் அவருக்கு அனுப்பப்பட்டது.


ரேசன் அரிசி , எல்.ஈ.டி பல்பு வாங்கியதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் , மற்றும் உணவுத்துறை உள்ளாட்சித்துறை அமைச்சார்கள் மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் இயக்குனரிடம் அளித்த புகாரில், ஒரு அரசாணையை காரணம் காட்டி இதுகுறித்து விசாரணைக்கு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அந்த அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக புகார் அளித்துள்ள திமுக  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீதும் , இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23.72 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக தனது தரப்பில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் முதல்வர் , அமைச்சர் மீது ஊழல் புகார் வந்தால் அதனை முதன்மை செயலாளர் விசாரிப்பார் என கடந்த 2018-ம் ஆண்டு ஒரு அரசாணை போடப்பட்டு இந்த புகார் அவருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் முதல்வர் , அமைச்சருக்கு கீழ் பணியாற்றும் ஒருவர் எப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என எனது தரப்பில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் வாதாடப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளிலும் அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மூன்று வழக்குகளையும் 7 –ந்தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் .