இன்று உலக எய்ட்ஸ் தினம்


உலக எய்ட்ஸ் நாள் : எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.


ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.


எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.


1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.


மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது.


சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது ,இதில் 270,000 குழந்தைகள்


மற்ற அனைத்து வைரஸ் நோய்களையும் போலவே, இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் என்ற வைரஸால் பரவுகிறது.


இந்த வைரஸ் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இது டி செல்கள் என்றும் அழைக்கப்படும் சிடி 4 செல்களை அழிக்கிறது.


இதனால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைக்கின்றன. எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நோயாளி மற்ற நோய்களை எதிர்க்கும் திறனையும் இழக்கிறார்.


எய்ட்ஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு சொல். சிடி 4 செல் எண்ணிக்கை 200 க்கும் குறைவாக இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது. சுமார் 500 முதல் 1500 வரை ஆரோக்கியமான நபர்களில் காணப்படுகின்றன.


உலகெங்கிலும் உள்ள நாடுகளில் எச்.ஐ.வி பாதிப்பு பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


முதல் உலக எய்ட்ஸ் தினம்:


உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் டபிள்யூ. பான் ஆகியோரால் கருதப்பட்டது. தாமஸ் நெட்டர் மற்றும் ஜேம்ஸ் டபிள்யூ. பான் இருவரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவின் WHO (உலக சுகாதார அமைப்பு) எய்ட்ஸ் உலகளாவிய திட்டத்தின் பொது தகவல் அதிகாரிகளாக இருந்தனர். எய்ட்ஸ் தினம் குறித்த தனது யோசனையை டாக்டர் ஜொனாதன் மான் (எய்ட்ஸ் குளோபல் புரோகிராம் இயக்குனர்) உடன் பகிர்ந்து கொண்டார்.


அவர் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்து 1988 டிசம்பர் 1 ஐ உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஐ உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாட அவர் முடிவு செய்தார்.


முதல் வழக்கு காங்கோவில் வந்தது:


பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட சில ஆப்பிரிக்க இளைஞர்களிடையே இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 1959 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்காவின் காங்கோவில் எய்ட்ஸ் நோய்க்கான முதல் வழக்கு பதிவாகியது, அவரின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, ​​அவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இந்த நோயால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.


எய்ட்ஸ் தொடர்பான தகவல்கள்:


உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும் 900 புதிய குழந்தைகளுக்கு எய்ட்ஸ் வருகிறது.
இந்தியாவில், 1986 ஆம் ஆண்டில் சென்னையில் சில பாலியல் தொழிலாளர்களால் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இன்று, இந்தியாவில் 5.13 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


எய்ட்ஸ் அறிகுறிகள்:
எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இத்தகைய அறிகுறிகள் காணப்படுகின்றன.



  1. தொண்டை வலி

  2. இரவு வியர்வை

  3. எடை இழப்பு

  4. காய்ச்சல்

  5. குளிர்

  6. சோர்வு

  7. பலவீனம்

  8. மூட்டு வலி

  9. தசை வலிகள்


எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எய்ட்ஸ் நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % தொற்று உள்ள கர்ப்பிணிகளின் மூலமாகவும், 2 % சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துன் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.


நோக்கம்:


எய்ட்ஸ் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும்.  எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் இதன் முக்கிய குறிக்கோளாகும்.


விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.


நான்கு முக்கிய வழிகளில் பரவுகிறது.


1) பாதுகாப்பற்ற செக்ஸ்,


2) பாதிக்கப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி,


3) தாய்ப்பால்,


4) பிரசவத்தின்போது தாய் – குழந்தை.


எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், விந்து, மாதவிடாய் முன் திரவம், மலக்குடல் திரவம், யோனி திரவங்கள் மற்றும் தாய்ப்பால் மூலமாகவும் எச்.ஐ.வி பரவுகிறது.


இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்


எயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும்.


அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.


தமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்


2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.


எச்.ஐ.வி., பாதித்தவர்களை தொட்டாலே நோய் பரவும் என தவறாக கருதுகின்றனர்.


இதனாலேயே எச்.ஐ.வி., பாதித்தவர்கள் சமுகத்தில் இருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டதாக கருதுகின்றனர்.


எய்ட்ஸ் நோயால் சாதாரண குடும்பத்து பெண்கள், முதியோர்கள், விவசாயிகள் என எல்லோருமே பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோயின் வேதனை அறிந்தவர்கள் என்றுமே எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்குவதில்லை. நம்மில் ஒருவர் தான் என்பதை உணர்ந்து ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும்.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்