BiharElections2020 : இன்று 3-ஆம் கட்ட தேர்தல்

 



இன்று பீகாரில் இறுதி மற்றும் 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.





243 தொகுதிகளை அடங்கிய பீகாரில்,சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது . 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.


இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் , 3வது கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு இன்று  ( நவம்பர் 7-ஆம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.


நேற்று முன்தினம்  மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. ஆகவே தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.


நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .இறுதி மற்றும் 3-வது கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 1208 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.


இன்று  நடைபெறும் 78 தொகுதிகளுக்கான தேர்தலில் 72 தொகுதிகள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.