முகம் அழகாக பளபளப்பாக இயற்கையான குறிப்புகள்

 



பொதுவாகவே பெண்கள் தங்களது முகம் அழகாக பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது வழக்கம்.

 

ஆனால் அதற்காக செயற்கையான கிரீம்களை உபயோகித்து இருக்கும் அழகையும் கெடுத்துக் கொள்வதை விட இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரங்களாகிய சில முக்கியமான பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கை அழகை அடையலாம் என்பது குறித்து இன்று பார்க்கலாம்.



இயற்கையான முக அழகு பெற


சோப்புக் குளியல்தான் முழுமையான குளியல் என்றில்லை. கடலைமாவை எலுமிச்சம் பழச்சாறில் குழைத்து, சோப்புக்குப் பதில் உபயோகிக்கலாம். இதேபோன்று, கோதுமைத் தவிட்டையும் உபயோகிக்கலாம். இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதாக உதிர்ந்து தேகம் புத்துணர்வு பெறும்.

 

நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய  ஆரம்பிக்கும்.

 

நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் முகத்தைக் காட்டினால், முகத்தின் நுண்ணிய வியர்வைத் துவாரங்களில்  உள்ளஅழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.

 

சிலருக்கு முன் மற்றும் பின் கழுத்து கருமையாகக் காணப்படும். இதைப் போக்க நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்  பீர்க்கங்காய் கூடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது கழுத்தில் நன்கு சோப்பு தடவி பீர்க்கங்காய் கூடால் நன்கு தேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் மாறி இயற்கையான நிறம் வந்துவிடும்.

 


முதலில் குளிர்ச்சி தன்மையுடைய கற்றாழை நமது முகத்துக்கு மிகவும் நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் கற்றாழை தடவி விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும் போது முகத்திற்கு புத்துணர்ச்சியும், அழகும் உருவாகும்.

 

அதுபோல விட்டமின் E எனும் கடையில் விற்கக்கூடிய மாத்திரை வடிவிலான எண்ணெயை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவும் போதும் முகம் பளபளப்பாகும்.

 

அதுபோல தயிர் மற்றும் கடலைமாவு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மட்டும் வைத்திருந்து கழுவி வர முகம் பளபளப்பாகும்.

 

அதுபோல தேன் மற்றும் காபி தூள் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடம் விட்டு கழுவி வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகு பெறும்.

 


வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பு அடையும். முக அழகைக் கொடுக்கும் தேமலை அகற்ற எலுமிச்சம் பழச்சாறுடன் துளசி இலைச்சாறைச் சேர்த்துத் தடவி வரவேண்டும்.

 

முகத்துக்கு மேக்கப் போடுவதற்குமுன் லேசாக முகம் முழுவதும் பன்னீரைத் தடவினால், சருமம் மென்மையாக இருக்கும்.  நீண்ட நேரம் மேக்கப் கலையாமலும் இருக்கும்.

 

உப்பு கலந்த எலுமிச்சம்பழச் சாறை பற்களில் தேய்த்தால், பற்களில் உள்ள கறை மறையும், ஈறுகளில் உள்ள கறை மறையும்.  ஈறுகள் பலம் பெறும்.

 


மேலும் வெள்ளரிக்காயில் உள்ள அதிக அளவு ஈரப்பதம் காரணமாக முகத்தில் அரைத்துத் தடவுவதால், முகம் பொலிவுடன் காணப்படும். அதுபோல பாதாம் எண்ணெயை வைத்து முகத்திற்கு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது மிகவும் நல்லது.

 



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்