தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடந்த 22-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைதொடர்ந்து அவரின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டதை அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது அவர்கள் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்கள்.