அதிபர் தேர்தல் டிரம்ப் காட்டம்

 



அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. 2-வது முறையாக வெற்றி பெற்று விடலாம் என டிரம்ப் நினைத்திருந்தார்.


ஆனால் கொரோனா வைரஸ் அவரது நினைப்பை காலி செய்துவிட்டது. டொனால்டு டிரம்பின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுக்க வேண்டியதாயிற்று என எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.


தேர்தல் பிரசாரத்தில் இது குறித்து தான் முக்கிய தாக்குதலாக இருக்கிறது. ஊடகங்களும் இதுபற்றிதான் விவாதித்து வருகின்றன.


இந்நிலையில் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ''வேலை வாய்ப்பு, ஸ்டாக் மார்க்கெட், பொருளாதாரம் ஆகியவை டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் எப்படி சிறப்பாக இருந்தது என்பதை விவாதிக்க செய்தி ஊடகங்கள் மறுக்கிறது.


விரைவில் நாங்கள் புள்ளி விவரத்துடன் வருவோம். அவர்கள் அனைவரும் கொரோனா குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள். ஆனால், நாங்கள் எதிர்க்கட்சியை வீழ்த்துவோம்'' என்று அவர்களால் சொல்ல முடியாது. என பதிவிட்டுள்ளார்.