நோய் தீர்க்கும் சுக்கு

இஞ்சி காய்ந்தால் தான் சுக்கு என்பது தெரியும்



சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று சொல்வார்களே அந்த சுக்கு மருந்தாக பலனளிக்க வேண்டுமெனில் அதை பக்குவமாக தயாரிக்கவும் வேண்டும்.


காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, இரவு கடுக்காய் இது மூன்றுமே அருமருந்து என்கிறார்கள் சித்தர்கள்.


மனித உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த மூன்றையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றால் காயகல்பமான இஞ்சி, சுக்கு, கடுக்காய் மூன்றையும் சேர்க்க வேண்டும்.


முன்னோர்கள் காலத்தில் எல்லாமே வீட்டில் தயாரித்தார்கள். ஆனால் இப்போது எல்லாமே பயன்படுத்தும் வகையில் எளிதாக கடைகளில் கிடைக்கிறது. 


இதை உடல் ஆரோக்கியத்துக்காக , கை வைத்தியமாக, மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தும் போது இவை பலன் அளிக்க வேண்டுமெனில் அவை பக்குவமாக உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


வாத நோய்க்கு மருந்து


வாதம், முடக்குவாதம், குதிகால் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு முதலில் கைவைத்தியமாக பயன்படுத்தினால் முதலில் தேடுவது சுக்கை தான். ஒருவேளை சுக்கை எடுத்தாலே பலன் கிடைத்துவிடும் 


கர்ப்பிணிகள் 7 ஆம் மாதம் முதல் சுக்கு நீர் குடித்துவந்தால் பிரசவம் சுகமாகும், சிக்கலில்லாமலும் இருக்கும்!


சுக்கை அப்படியே மிக்ஸியில் இட்டு பொடித்து வைத்துகொள்ளலாம். சற்று நாள் ஆனாலும் சுத்தமான சுகாதாரமான வீரியம் குறையாத சுக்கு கிடைக்கும்.


இது மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தும் போது பலனும் கிடைக்கும்.


நாட்டுமருந்து கடையில் வாங்கும் போது சுக்கை கண்டிப்பாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.


இல்லையெனில் பலன் கிடைக்காது. சுக்கை உணவுக்காகவும், மருந்துக்காகவும் என எதற்கு பயன்படுத்தினாலும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். 


சுக்கை வாங்கி சுண்ணாம்பு ( வெற்றிலை போடும் பொது பயன்படுத்தப்படும்) கலந்து வெயிலில் அரைமணி நேரம் வைக்கவும். பிறகு அதை நெருப்பில் சுட்டு எடுத்தால் அதன் மேல் தோல் வந்துவிடும். கைகளால் உரித்து எடுத்தால் அவை அப்படியே வந்துவிடக்கூடும். பிறகு அதை பொடித்து பயன்படுத்தலாம்.


இப்படி பயன்படுத்தினால் என்ன காரணங்களுக்காக பயன்படுத்துகிறோமோ அதற்கான பலன் கிடைக்கும்.


அருமருந்து சுக்கு  சுக்கை எப்படி பயன்படுத்தலாம்


சுக்கு பொடி தயாரித்து வைத்துகொண்டால் காபியில் சுக்குபொடி கலந்து குடிக்கலாம்.


சுக்கு மல்லி காபி தயாரிக்கும் போது இந்த சுக்கை சுட்டு சேர்க்கலாம்.


சுக்கை பாலில் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுக்கு குழம்புக்கும், காரகுழம்புக்கும் சேர்க்கலாம்.


தொண்டைக்கமறல், காய்ச்சல் வரும் போது வளரும் பிள்ளைகளுக்கு சுக்குபொடியில் தேனை குழைத்து சாப்பிட வைக்கலாம்.


சுக்கு மிட்டாய் தயாரிக்கலாம்.


பலன்கள்


பசியை தூண்டும் தன்மை சுக்குக்கு உண்டு.


வாய்வுத்தொல்லையை நீக்கும்.


தலைவலி வரும் போது சுக்கை உரைட்து போட்டால் பலன் கிடைக்கும்.


வயிற்றுப்பொருமல் இருக்கும் போது சுக்கு சேர்த்தால் பொருமல் அடங்கும்.


நோய்கள் இல்லாமல் வைத்திருக்க சுக்கு பெருமளவு உதவும்.


மிக முக்கியமாக பலவித குறைபாட்டை தீர்க்கும்.


அவ்வபோது உணவில் சேர்த்துவந்தால் குறைபாடே இல்லாமல் செய்துவிடும்.


இனி சுக்கை  பயன்படுத்த தொடங்குங்கள்.


உடலில் எதிர்ப்புசக்தி இயல்பாக அதிகரிக்க, இளமையோடு வாழ ஒரு மண்டலம் இதை சாப்பிடுங்க, சித்தர்கள் வழிமுறை.



இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்