சென்னையில் நகைக்கடையில் கொள்ளை


சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை.


சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். மொத்த வியாபாரம் செய்யும் நகை கடையில், பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் திருடி உள்ளனர்.


நகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.