ஒரு பந்தில் 286 ரன்கள்.. நீங்க நம்பலனாலும் அதான் நெஜம்..

 



கிரிக்கெட் உலகில் பல அசாதாரண சாதனைகள் குறித்து கேள்வி பட்டிருப்போம்.


எடுத்துக்காட்டாக சச்சின், ரோகித், கெயில், மார்டின் குப்டில், போன்றவர்கள் 50 ஓவர் போடியில் 200 ரன்கள் மேல் குவிந்து சாதனை படைத்ததை கூறலாம்.


ஆனால் ஒரே ஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவரஸ்ய சாதனை பற்றி தெரியுமா..?


மேற்கு ஆஸ்திரேலியாவில் 1894-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி விக்டோரியா ஸ்காரட்ச் லெவன் என்ற உள்ளூர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய விக்டோரியா அணி, தான் எதிர்கொண்ட முதல்பந்தை தூக்கி அடித்துள்ளதால் மைதானத்தின் மரத்தில் சிக்கி கொண்டது.


பந்து மரத்தில் சிக்கியதை தொடர்ந்து தொடக்க வீரர்கள் ரன் ஓடி கொண்டு இருந்துள்ளனர். ஆனால் எதிர் அணி நடுவரிடம் பந்தை இழந்து விட்டதாக அறிவிக்குமாறு வலியுறுத்தினார்கள் ஆனால் அந்த பந்து அவர்கள் கண்ணுக்கு தெரிந்ததால் நடுவர்கள் மறுத்து விட்டனர்.


மரத்தில் சிக்கிய பந்தை பல வழிகளில் எடுக்க முயற்ச்சி செய்தனர். கோடரி கொண்டு மரத்தை வெட்டுவது, துப்பாக்கியால் குறிவைத்து சுடுவது போன்ற முயற்சிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தொடக்க வீரர்கள் ரன் எடுத்து கொண்டே இருந்துள்ளனர்.


ஒரு வழியாக பந்து மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. அதனை யாரும் கேட்ச் செய்யவில்லை. ஆனால் அதற்குள் தொடக்க வீரர்கள் 286 ரன்களை ஓடியே எடுத்துள்ளனர். இறுதியாக விக்டோரியா அணி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது ஒரு பந்தில் 286 ரன்கள் ஓடியே எடுத்து வெற்றியும் கண்டனர்.