இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்


இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக உக்ரேனுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனி இருதரப்பு விமான ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளதால், இப்போது இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.





கொரோனா தொற்றுநோய் காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும்போது வணிக பயணிகள் சேவைகளை மறுதொடக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளுக்கிடையேயான தற்காலிக ஏற்பாடுகள் ஆகும்.


இந்நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஓமான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், கென்யா, பூட்டான், ஜப்பான், மாலத்தீவுகள், நைஜீரியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்த ஏற்பாடுகளை செய்து உள்ளது.