ஹால்டிக்கெட் கிடைக்காததால் மாணவி தற்கொலை


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி-களபம் எனும் கிராமத்தை சேர்ந்த விவாசாயியின் மகள் தான் ஹரிஷ்மா.


தனியார் பள்ளியில் பயின்ற இவர், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். அவருடன் விண்ணப்பித்த சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.


ஆனால், மாணவி ஹரிஷ்மாவுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வரவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணவி 31.08.2020  விஷம் அருந்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 31.08.2020 உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில், இவருக்கு 01.09.2020 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்துள்ளதாம்.