ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்

 



கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினரில் ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப்பொருட்கள் சீராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர்  ஆர்.காமராஜ் கூறினார்.


தமிழக முதல்வர் கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றித் தருவார் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.