குறுஞ் செய்திகள்


கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும் என்று ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


பி.சி.,எம்.பி.சி., பிரிவினருக்கு அரசு பணி வழங்கியது பற்றிய தகவலை வெளியிட மறுத்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


சான்றிதழில் சாதி பெயரை நீக்கினால் தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன், தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சனை வரும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அச்சப்படுவது மாயை, கற்பனையானது எனத் தெரிவித்துள்ளார்.


----------------------------------------------


பரமக்குடியில் முக்குலத்தோர் தேவர் புலிப்படை கட்சி நிர்வாகி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.பாண்டித்துரை என்பவரின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்தனர்