வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை கிறிஸ்துவ  NGO அமைப்புகளின் உரிமம் ரத்து


வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நான்கு கிறிஸ்துவ  என்.ஜி.ஓ., அமைப்புகளின் உரிமம் ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளி நாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியமாகும். இந்நிலையில், இந்த ஆண்டு 6 என்.ஜி.ஓ.,க்கள் அமைப்பின் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் 4 கிறிஸ்துவ அமைப்புகளும் அடங்கும்.


இதில் அமெரிக்காவைச் சேர்ந்த செவந்த் டே அத்வந்து மற்றும் பேப்டிஸ்ட் சர்ச் உள்ளிட்ட நன்கொடையளிக்கும் 2 கிறிஸ்துவ அமைப்புகளும் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஜார்கண்டில் உள்ள எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், லூதரன் சர்ச், மணிப்பூரில் உள்ள சர்ச் கூட்டமைப்பு மற்றும் மும்பையில் உள்ள நியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன் ஆகியவற்றின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஆனால் ரத்து செய்ததற்கான காரணமும், என்ன மீறல் என்பதும் குறிப்பிடப்படவில்லை.


இப்போது வரை வெளிநாட்டு நன்கொடை பெறும் சட்டத்தின் கீழ் 22,457 என்.ஜி.ஓ. அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,674 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.