கேரளாவில் தங்கக் கடத்தல் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரித்தபோது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் இதில் ஈடுபட்டிருப்பதை வெளிப்படுத்தினார். பின்னர் ஐ.டி துறை ஸ்வப்னா சுரேஷை நீக்கியது. இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ (National Investigation Agency) விசாரித்து வருகிறது.
முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கருடன் நட்பு வைத்திருக்கிறார். இருப்பினும், இதில் முதலமைச்சரின் ஈடுபாடு குறித்து எதுவும் தெரியவில்லை. தங்கக் கடத்தல் ஊழலில் ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்.சிவசங்கரிடம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.