IPL2020


ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 4_ லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின.


இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதனயைடுத்து, 217 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட் இழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.



இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. இந்நிலையில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய போட்டியின் மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 


துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிவிட்டு வெளியேறினார்.


இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் அதிதீவிரமாக உள்ளதால் எஞ்சிய போட்டி தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.



இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன்  அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த அதிரடி ஆட்டத்துக்கு மிகவும் உதவிகரமாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.