மத்திய நுகர்வோர் வழிகாட்டுதல் அமைப்பான CGSIயானது கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், அவர்கள் பரிசோதித்த 122 சானிடைசர் மாதிரிகளில் 5 நச்சுத்தன்மை கொண்ட மெத்தனால் கலந்திருந்ததாகவும், அவற்றில் 45 சானிடைசர்களில் பாட்டிலில் குறிப்பிடப்பட்ட விவரக்குறிப்புகளுடன் உள்ளே இருக்கும் வேதிப்பொருட்கள் பொருந்தவில்லை. எனக்குவம் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.
மேலும் இவைகளில் 4% நச்சுதன்மை கொண்ட மெத்தனால் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சானிடைசர்கள் மாதிரியானது, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நவி மும்பை, தானே, சந்தையில் கிடைத்தவை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகும். பயன்படுத்துவோருக்கு தீங்கு விளைவிக்குமா என்பதையும் சரிபார்க்க அவர்கள் சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அறியப்பட்ட மேற்கண்ட முடிவுகளின் படி, இது மீளமுடியாத பார்வை நரம்பு பாதிப்பு மற்றும் கண்பார்வை பறிபோகுதல் போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.