வேளாண் மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்

 



சர்ச்சைக்குள்ளான விவசாய மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் விவசாய திருத்த மசோதாக்களை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கா விட்டால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதாலாளிகள் கரங்களில் விவசாயிகள் விழுந்து, சுரண்டப்படுவார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


ஐஐடியில் படித்து அரசு துறைகளில் பெரிய பொறுப்புகளில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த மசோதாக்களை எதிர்த்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.



இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.