விரைவு போக்குவரத்து கழகம் அறிவுரை


தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும்.


தமிழகத்தில் செப்டம்பா் 7 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.


நள்ளிரவு காலை 4 மணி வரை நடத்துநர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும்.


நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுரைகளை வழங்கி உள்ளது.