தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தொடரை சமூக இடைவெளியுடன் தலைமைச் செயலகத்தில் நடத்த போதுமான இடம் மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால், இந்தக்கூட்ட தொடரை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
அந்தவகையில், நேற்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலைவாணர் அரங்கத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், கலைவாணர் அரங்கில் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாகவும், இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.