வீட்டில் வைக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க உயர்நீதிமன்றம் அனுமதி


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.


இந்தநிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இதனை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் வீடுகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேலும் விநாயகர் சதுர்த்திக்காக தளர்வுகள் அளிக்க இயலாது என தமிழக அரசு கூறியதை ஏற்று உயர்நீதிமன்றன் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு.


விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த மாட்டோம் என உயர்நீதிமன்றம் இந்து அமைப்பினர் உறுதி என தெரிவித்துள்ளனர்.