மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து இருந்த மக்கள் சிக்கியுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளார்களோ அவர்களுக்கு ஏன்னா ஆனதோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.