பஞ்சபூதத் தலங்கள் வாயுத்தலம்
திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் - வாயு
திருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி
திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
திருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி
ஸ்ரீ - காளம் - அத்தி -சிலந்தி - பாம்பு - யானை - ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில். மலை, கைலாசகிரி என்று வழங்கப்படுகிறது.
இங்கு இவ்ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்வடிம் மிகச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அன்புக்குச்சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி வீடுபேறு பெற்ற விழுமிய தலம். 'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி' எனச் சிறப்பிக்கப்படும் தலம். நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி' பாடியுள்ள பெருமை பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.
கண்ணப்பரின் பக்தியை வியந்து ஸ்ரீ ஆதிசங்கரர், தம் சிவானந்தலஹரியில் பாடியுள்ளதை அனைவரும் அறிவர். அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
பொன்முகலியைக் கடந்து நெடிதுயர்ந்த மலையடிவாரத்தில் உள்ள காளத்தியை அடைந்தபோது நம் நெஞ்சில் கண்ணப்பருக்கு எழுந்து உணர்வு மேலிடுகிறது.
இந்நிலப்பரப்பைத் தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும் வழியில் 'தொண்டைமான் நாடு' என்னும் பெயரில் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் 'தொண்டமநாடு' என்று அதை வழங்குகின்றனர்.
இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்று அழைக்கப் படுகிறது. பேருந்தில் செல்லும்போது சுவர்ணமுகி பொன்முகலிப் பாலத்தைக் கடந்து ஊருள் செல்ல வேண்டும்.
நகராட்சி அந்தஸ்தில் உள்ள சிறிய ஊர் - வட்டத்தலைநகர். ஊருள் மிக உயர்ந்து கம்பீரமாகக் காளிகோபுரம் காட்சி தருகிறது. ஏழு நிலைகளுடன் பழமையாகத் திகழும் இக்கோபுரம் ஸ்ரீ கிருஷ்ண தேவாராயரால் A.H. 1516 - ல் கட்டப்பட்டது.
இதைக்கடந்து செல்லும் நாம் அடுத்து, கோயிலின் பிரதான வாயிலை அடைகிறோம். இக்கோபுரம் 'பிக்ஷசாலா கோபுரம்' என்றழைக்கப்படுகிறது. இதுவும் ஏனைய கோபுரங்களும் 12 ஆம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.
இக்கோபுரத்தில், துவார கணபதியும், தண்டபாணியும் இட்ம் மாறிக்காட்சி தரகின்றனர். வலப்பால் ஆலய அதிகாரியின் அலுவலகம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்நுழைந்ததும், வலப்பால் வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதி தனிக்கோயிலாக - சிறியதாகவுள்ளது.
இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது. விநாயகர் சந்நிதியும், பாலஞானாம்பாள் சந்நிதியும் உள்ளன. அடுத்துப் பஞ்சமுகேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. இடப்பால் பழைய அம்பாள் உருவம் நிறுத்தப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆங்காங்குச் சிவலிங்கத் திருமேனிகள் பல உள்ளன.
அடுத்து வரும் வடக்குக் கோபுர வாயில் வழியாகத்தான் சுவாமி புறப்பாடு நிகழுமாம். சற்றுமுன் சென்றால் இடப்பால் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பெயருக்கேற்ப, விநாயகர் 35' ஆழத்தில் உள்ளார். 20 படிகள் இறங்கிச்சென்று தரிசிக்க வேண்டும். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தியாகும்.
எதிரில் சிவராத்திரி மண்டபம் உள்ளது. அடுத்து, மூலையில் 2 கால்களை வெளியே நிறுத்திச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் வலப்பால் சுவரோரமாகவுள்ளது. கவனித்தால்தான் இது தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால் இரண்டு கால் 'மண்டபம்' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.
அடுத்து உள்ளிருக்கும் மூலவருக்கு நேரகாச் சுவரில் சாளரம் அமைத்து அதற்கு வெளியில் பிரதிட்டிக்கப் பட்டிருக்குமூ நந்தியைக் காணலாம். இங்குத் தலையில் மத்தியில் மண் நிரப்பப்பட்டுள்ள சதுரமான பகுதி உள்ளது. கார்த்திகைத் தீபத்தன்று இங்குத்தான் 'சொக்கப்பானை' கொளுத்தப்படும். இம்மண்ணை வாரிவிட்டால் பெரும்பள்ளமாகத் தோன்றும்.
அதில் நடுவில் பனைமரத்தை நட்டுச் சுற்றிலும் சிறுசிறு கொம்புகளை நட்டு, அதைச் சுற்றிலும் ஓலைகளைச் சுற்றுவார்கள். இடித்த எள்ளைப் பிசைந்து அகல்போலாக்கி அதில் எண்ணெய், திரியிட்டு ஏற்றிப் பனை மரத்தின் உச்சியில் வைத்து, சொக்கப்பானையைக் கொளுத்துவார்கள்.
எல்லாம் எரிந்து, அகல் விளக்கும் எரிந்து போகும். அப்போது அதை எடுத்து அரைத்து அக்கரியை (ர¬க்ஷயாக) சுவாமிக்குக் கறுப்புப்பொட்டாக இடுவார்கள். இது இங்கு விசேஷமானது.
நாளை வாயு (பகுதி 3) ஆலயம் தொடரும்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம் - சிவமே அன்பு
திருச்சிற்றம்பலம்
ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்