கறிக் குழம்பு சுவையில் காளான் குழம்பு செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.
இந்த காளான் குழம்பு சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேஸ்ட் அரைக்க
நல்ல எண்ணெய் - 2 tsp
சீரகம் - 1 tsp சோம்பு - 1 tsp சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1 உப்பு - 1 tsp
குழம்பு வைக்க :
காளான் - 250 கிராம்
நல்ல எண்ணெய் - 3 tsp
கிராம்பு , பட்டை, ஏலக்காய்
வெங்காயம் - 2 தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் - 1/4 tsp மிளகாய் தூள் - 1 tsp
குழம்பு மிளகாய் தூள் - 2 tsp
தண்ணீர் - 1 கப்
உப்பு - தே.அ கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
குழம்பு செய்ய குக்கர் எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு சேருங்கள்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் தக்களி, கறிவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறுங்கள்.
பச்சை வாசனை நீங்கி பேஸ்ட் சுருங்கியதும் காளானை சேர்த்து பிரட்டுங்கள். அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக நன்றாக கிளறி, மூடி 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள். இதில் காளானில் உள்ள நீர் வெளியேறிவிடும்.
அடுத்ததாக 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் நன்கு கலந்து குக்கர் மூடி போட்டு மூடி விடுங்கள்.
ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடுங்கள். பிரஷர் இறங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.
சுவையான காளான் குழம்பு தயார்.
மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்
வணக்கம் அன்புடன் கார்த்திகா