முதலமைச்சர் இன்று பயணம்:
கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி 19.05.2020 அன்று எழுதிய கடிதத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள்40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை தமிழக அழைத்து வர நடவடிக்கை வேண்டும் என உங்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43,000 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகளை வாங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.