விகாஸ் துபே சுட்டுக்கொலை

விகாஸ் துபே சுட்டுக்கொலை



கான்பூரில் எட்டு காவல்துறையினர் என்கவுண்டர் ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் நேற்று மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விகாஸ் துபே  நேற்று (ஜூலை 9) மத்தியப்பிரதேசத்தில் பிடிபட்ட உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு காவல் படையினர் கான்பூருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்ததாகவும் அப்போது அங்கிருந்து தப்பிடயோட முயற்சித்த விகாஸ் துபே மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றனர்.


* போலீசாரின் துப்பாக்கியை பறித்து, விகாஸ் துபே சுட முயற்சித்தார்- 


* தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்- உ.பி. காவல்துறை



அம்பத்தூர் அடுத்த சண்முகபுரத்தில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உதவி ஆய்வாளர் மகேஷின் மகன் யுவராஜை 3 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த யுவராஜ் சிகிச்சைக்காக கே.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ரூ.3,688 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக DHFL நிறுவனம் மீது புகார்