கொரோனா-அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம்

 



கொரோனாவால் தாம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப், தமது குடும்பத்தினர், பணியாளர்கள் பரிசோதனை செய்துக்  கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்படி அமிதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கு உடல்நிலை சீராக உள்ளது என  மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் நலம் விசாரித்து உள்ளார்.அமிதாப் பூரண நலம் பெற கமல் வாழ்த்து



ஊரடங்கு காலத்தில் சிவில் பிரச்னையில் விசாரணையின்றி உத்தரவிட்ட டிஆர்ஓவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுவதாகக் கூறி, ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. 


திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் சுரேஷ் (எ) அய்யனாரப்பன். இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 


எனது தந்தை சண்முகசுந்தரம். இவரை எங்களது தாத்தா-பாட்டி தத்ெதடுத்து வளர்த்தனர். என் தாத்தாவுக்கு பங்காக வழங்கப்பட்ட சொத்து இருந்தது. அவருக்கு பிறகு அந்த சொத்தை எனது பாட்டி பராமரிக்கும் உரிமை இருந்தது. இதனிடையே, எனது தாத்தாவிற்கான சொத்தை சிலர் கிரையம் செய்துள்ளதாக ஆவணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.