சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலோட் இடையிலான மோதலால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கும் பிரச்சினை என்றாலும் பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று ரன்தீப் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.