செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் 4 டாக்டர்கள், 5 செவிலியர்களுக்கு கொரோனா உறுதியானது. அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் மேலும் 18,522 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,66,840-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் கெமிக்கல் இல்லாத இயற்கை கிருமி நாசினியை டிரோன் மூலம் தெளிக்கும் முறையை டிஐஜி தேன்மொழி தொடங்கி வைத்தார்.
சென்னை சிட்டி சன்ஸ் போரம், சுகர்தனா நிறுவனம், தக்சா ஆள் இல்லாத விமான நிறுவனம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், டிரோன் மூலம் கெமிக்கல் கலக்காத இயற்கை கிருமிநாசினியை தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பகுதிகளுக்கு சென்று, ரத்தம் மற்றும் சளி மாதிரி சேகரிக்க இயக்கப்பட்ட வாகனம், காட்சி பொருளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் திட்டம் செயலற்று கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடும் ஊரடங்கு அமலில் உள்ளது
ஆனாலும், பல இடங்களில் திருட்டு, கொலை, வழிப்பறி உள்பட பல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்து கொரோனா பரவாமல் தடுக்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது குறித்த ஒத்திகை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், போலீசார் நடத்தினர்.