வைரமுத்து - பாடலாசிரியர் மற்றும் கவிஞர்

வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார்.



சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.


முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.


தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார்.


1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்


கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிஞர் கண்ணதாசன்



தமிழாற்றுப்படையில் திருவள்ளுவர்


தமிழாற்றுப்படையில் பேரறிஞர் அண்ணா


தமிழாற்றுப்படையில் கலைஞர்


கவிதைத் தொகுப்புகள்


    வைகறை மேகங்கள்
    திருத்தி எழுதிய தீர்ப்புகள்
    இன்னொரு தேசியகீதம்
    எனது பழைய பனையோலைகள்
    கவிராஜன் கதை
    இரத்த தானம்
    இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
    தமிழுக்கு நிறமுண்டு
    பெய்யெனப் பெய்யும் ம‌ழை 


   "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்"


   


வைரமுத்துவும் ஜெயகாந்தனும்


நாவல்


    வானம் தொட்டுவிடும் தூரம்தான்
    மீண்டும் என் தொட்டிலுக்கு
    வில்லோடு வா நிலவே(வரலாற்று நாவல்)
    சிகரங்களை நோக்கி
    ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
    காவி நிறத்தில் ஒரு காதல்
    தண்ணீர் தேசம்
    கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
    கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)   


விருதுகள்


    கலைமாமணி விருது - 1990.
    சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
    பத்ம பூசன் விருது (2014)


    சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது


    (ஆறுமுறை).


விருது பெற்ற பாடல்கள்


    அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985.
    சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992.
    போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா),


     உயிரும் நீயே   (திரைப்படம்: பவித்ரா) - 1994


    முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999.
    நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002.
    கள்ளிக்காட்டில் பிறந்த தாயே


    (திரைப்படம்: தென்மேற்குபருவக்காற்று) - 2010.   


     எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016


சிறப்புகள்


திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார்.


மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்


நமது உண்மை  செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.


நன்றி.


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்