கோவேக்சின்  2 ஆம் கட்ட பரிசோதனை

கோவேக்சின்  2 ஆம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் - எய்ம்ஸ் இயக்குநர்



இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது  நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மராட்டியமும், தமிழகமும் திகழ்கிறது.


அந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.


ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


முதல் கட்டத்தில், எதிர்மறையான விளைவு ஏற்படுகிறதா என்பது மட்டுமே சோதிக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என்பது, இரண்டாவது கட்டத்தில் பரிசோதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பாரத் பயோடெக் உள்பட 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. முதல் மற்றும் 2 ஆம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் நிறுவனம் பாரத் பயோடெக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.