திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உரிய ஆவணமின்றி ஆந்திராவில் இருந்து எடுத்துவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.81 லட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,81,121 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,34,54,727 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 78,46,586 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 59,574 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.