பருப்பு உருண்டை குழம்பு


பருப்பு உருண்டை  செய்ய தேவையான பொருள்:


கடலைப்பருப்பு - 3/4 கப்


துவரம் பருப்பு-   1/4 கப்


சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன்

 

இஞ்சி - சிறிய துண்டு

 

வெங்காயம் - ஒன்று

 

உப்பு - தேவையான அளவு

குழம்பு செய்ய தேவையான பொருள்:



தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்

சோம்பு, கசகசா - 1/2 டீஸ்பூன்

தக்காளி - 2

வெங்காயம் - 2

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5



செய்முறை: 



 

உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற  பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய  உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். 

 

தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

 

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை, சின்ன வெங்காயம் கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.

 

அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள்,  மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 

இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை  வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி  இறக்கவும்.

 

குறிப்பு:

உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.

 

மோகனா  செல்வராஜ்