வழிபாட்டு தலங்கள் - திறப்பு

 


 



 


 தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு இல்லை


சென்னை: தமிழகத்தில் நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வழிபாட்டுத் தலங்கள் திறப்பு தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி இருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவதில் தமிழக அரசு தயக்கம் காட்டலாம் எனவும் கூறப்படுகிறது.