அரபு நாட்டு பேரீச்சம் பழங்கள்

 



அரபு நாட்டு பேரீச்சம் பழங்களை நம்ம ஊரில் விளைவித்து சாதித்த விவசாயி; ஆட்சியர் நேரில் பார்வை......

நாமக்கல் அரபு நாடுகளில் அதிகளவில் விளையக்கூடிய பேரீச்சம் பழமரங்களை நாமக்கல்லில் விளைவித்து அசத்திய விவசாயியின் பேரீச்சம் மர தோட்டத்தை ஆட்சியர் ஆசியா மரியம்  நேரில் சென்று பார்வையிட்டார்....


இந்த நிலையில் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் பேரீச்சம் பழமரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி கிராமம் கொன்னக்காடு பகுதியில் கணேசன் (60) என்ற விவசாயி தனது தோட்டத்தில் 8 ஏக்கரில் பேரீச்சம் மரங்களை விளைவித்தார்...

தர்மபுரியில் இவ்வாறு இரண்டு ஆண்டுகள் பராமரிக்கப்பட கன்றுகளை ஒருவர் விற்பதாக அறிந்தேன். கன்று வாங்கி 8 ஏக்கரில் பயிரிட்டேன். கடந்த ஆண்டு உரிய பலன் கிடைக்காமல் வெறுத்துபோய் இது சரிவராது மரக்கன்றுகளை அழித்து விடலாம் என்று நினைத்தபோது எனக்கு மரக்கன்றுகள் கொடுத்தவர் பொறுமையாக இருங்கள், வெளிநாடுகளில் இருந்த விஞ்ஞானிகளை அழைத்த வந்து பார்ப்போம் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார்.