ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலா துறை விடுதியில், துணை மேலாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர் ராவ்.
அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் வேலை விஷயமாக, பாஸ்கர் ராவ் பேசினார். அப்போது முகத்திற்கு கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அணியாமல் தங்களிடம் பேசக்கூடாது என்றும், உஷாராணி அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், அந்தப் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அலறி துடித்துக் கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை உதைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
_______________________
திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை - திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு
* சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை
* அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பு
கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்!
தூத்துக்குடி எஸ்.பி அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை 57% ஆக உயர்வு!
கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு சென்ற தமிழகம்!
இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 418 பேர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனாவிலிருந்து 56,64,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொரோனாவால் 5,08,078 பேர் உயிரிழப்பு.
உலகளவில் 1.04 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு!
இந்தியாவில் புகழ்பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாக மாகாரஷ்டிராம் மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் விளங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதலை அரங்கேற்றினர்.
உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து தாஜ் ஓட்டலில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மும்பை தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாஜ் ஹோட்டலுக்கு இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ள பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், தாஜ் ஹோட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.