லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய தரப்பில், ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் சொந்த கிராமத்தில் வீரர் பழனியின் மரணம்.
வீரர் பழனியின் மரணம் அவரது சொந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர். எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், 'லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!' என்று பதிவிட்டுள்ளார்.
பழனியின் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும் - கமல்ஹாசன்
தமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் - தமிழிசை