மாலை நேரச் செய்திகள்

மாலை நேரச் செய்திகள்


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டை நாளை மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.-  தேர்வுத்துறை உத்தரவு:


*************


சேலத்தில் ரூ.441 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


************


நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.


************


காய்கறி மார்க்கெட், வணிக வளாகம், திருமண மண்டபங்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.


************
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


**************


மாதாந்திர பூஜைக்காக வரும் 14ஆம் தேதி சபரிமலை திறக்கப்படும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.


*************