உலக இரத்த தான தினம் இன்று.


ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்த தான தினம்  கடைபிடிக்கப்படுகிறது.


மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாளையும், இரத்த தானம் வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1868ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.


இவர் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்தார். இர்வின் பாப்பருடன் இவர் இணைந்து 1909ஆம் ஆண்டு போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்து போலியோ வைரஸ்-ஐ  கண்டறிந்தார்.


இதற்காக இவருக்கு 1926ஆம் ஆண்டு அரோன்சன் பரிசு  கிடைத்தது.


1927ஆம் ஆண்டு பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இரத்த தானம் செய்வோரை ஊக்குவிக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைகின்றது.கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 


கடந்த 2004ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ரத்த தான தினம், ரத்தம் தானம் செய்ய வேண்டியதன் அவசியமும், பாதுகாப்பான ரத்த பரிமாற்றம், ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உடலுக்கு தேவையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.


ரத்த தானம் ஒரு உயிரைக் காக்கக் கூடிய மிக முக்கிய விஷயம் என்பதால் ரத்த தான விழிப்புணர்வு மிக அவசியமாகிறது.


இளைஞர்கள் சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அதே வேளையில், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சரியாக பரிசோதனை செய்யப்படாத இரத்தத்தை ஏற்றியதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், சிகிச்சை பெற சென்றவர்களுக்கு எய்ட்ஸ் பரவியது உறுதி செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன.

இது போன்ற மோசமான மருத்துவ சிகிச்சை தடுக்கும் வகையில் தான் உலக ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.


உதிரம் தந்து... உயிர் கொடுப்போம்... உலக இரத்த தான தினம் இன்று.


மோகனா செல்வராஜ்