உலக மூளைக்கட்டி தினம் ( 08/06/2020)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி உலக ப்ரெய்ன் டியூமர் தினம் (அ) உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது
மூளைக் கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வகையான வளர்ச்சி, அசாதாராணமாக ஏற்படும் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் ஏற்படுகிறது. அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம். எவ்வகைக் கட்டியாக இருப்பினும், அவற்றினால் மண்டையோட்டினுள் ஏற்படும் மேலதிக அமுக்கம் காரணமாக தாக்கம் ஏற்படும். தாக்கத்தின் அளவானது கட்டி இருக்குமிடம், அதன் வகை, வளர்ச்சி நிலை என்பவற்றில் தங்கியுள்ளது. இவ்வகையான கட்டி இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும், இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது இன்றியமையாதது.
தொடக்கநிலை (உண்மை) மூளைக் கட்டிகள் பொதுவாக குழந்தைகளில் மண்டையறை பின்பள்ளத்திலும் வயதுவந்தோர்களில் பெருமூளை அரைக் கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை மூளையின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நோயறிதல்
மூளைக் கட்டிகளுக்கு மருத்துவ ரீதியான குறிப்பிட்ட குறிகளோ அல்லது அறிகுறிகளோ இல்லாத போதும் மெதுவாகத் தீவிரமாகும்.குவிய நரம்பியக் குறிகள் மற்றும் அதிகரித்த மண்டையக அழுத்தத்தின் குறிகள் அத்துடன் கால் கை வலிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கால் கை வலிப்பு மிகவும் தீவிரமடைந்த எதிர்மறை வரலாற்றினை உடையவர்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை அறியலாம்.
தலையின் அளவு அதிகமாகுதல், உணவு உட்கொள்ள மறுத்தல், உடல் எடை குறைதல், எப்பொழுதும் சோர்வாக இருத்தல், அழுதுகொண்டே இருத்தல் இதுபோன்றவை, குழந்தைகளுக்கு மூளை கட்டி வருவதற்கான அறிகுறிகள். மேலும், மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சையுடன் சீரான உணவுப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் தங்கள் நோயை விரைவில் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதன்மை மூளைக் கட்டிகளின் நிலைப்புத்திறன் வீதங்கள் கட்டியின் வகை, வயது, நோயாளியின் செயல்பாட்டு நிலை, அறுவை சிகிச்சை கட்டி நீக்கத்தின் பரிமாணம் உள்ளிட்ட சில காரணிகளைச் சார்ந்துள்ளது
கதிரியக்கச் சிகிச்சையானது இரண்டாம் நிலை புற்று மூளைக் கட்டிகளுக்கு மிகவும் பொதுவான சிகிச்சையாக இருக்கிறது. கதிரியக்கச் சிகிச்சையின் அளவு புற்று நோயின் காரணமாக மூளை பாதிக்கப்பட்ட பகுதியின் அளவைச் சார்ந்ததாக இருக்கிறது.
குறுகிய இட நுண் கதிரியக்கச் சிகிச்சையானது பொதுவாக மூன்று சிறிய இரண்டாம் நிலை மூளைக் கட்டிகள் இருக்கும் சூழல்களில் பரிந்துரைக்கப்படுகின்றன.
மூளை முதுகுத் தண்டுநீரின் வடிகால் அமைப்பு தடைபடுவதன் காரணமாக ஏற்படும் மண்டை வீக்கத்தை (hydrocephalus) இந்த சிகிச்சையின் மூலமாக நீக்க முடியும்
அனைத்து வயதினர் மத்தியிலும் செல்போன் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கும் மூளை கட்டி வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் ஆண்களை விட பெண்களுக்கே மூளை கட்டி அதிகமாக வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
தொகுப்பு மோகனா செல்வராஜ்