உயிரிழப்பவர்களின் சடலம்- நீதிபதிகள் விரிவான உத்தரவு

 



இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.97 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


இதனிடையே தான் மனிதத் தன்மையற்ற சில செயல்களும் இந்தியாவில் அரேங்கேறி வருகின்றன. 


டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.


கொரோனா சிகிச்சை முறை, கொரோனா நோயாளிகள் தொடர்பான விவரம், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் விவரம், அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், மருத்துவமனைகளில் உள்ள இடவசதி, வாகன வசதி உள்ளிட்டவை தொடர்பாக தமிழகம், மேற்குவங்கம், டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர்களும், மத்திய அரசும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலம் விலங்குகளின் சடலத்தை விட மோசமாக கையாளப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்


மேலும், இந்த விவகாரத்தில் வரும் 17ஆம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.