விமான சேவை


மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை: 6 லட்சம் பேர் பயணம்!


உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியதில் இருந்து இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3ம் கட்ட ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


 


அதில் ஒருபகுதியாக உள்நாட்டு விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் மிஷன் மூலமாக தாயகம் வந்து சேர்ந்துள்ளனர்.


அந்த திட்டத்தின் 3ம் கட்டமாக மே 6ம் தேதி வரை இதுவரை 65,000 பேர் 311 விமானங்களில் இந்தியா வந்தடைந்துள்ளனர்.


 


கடந்த 25ம் தேதி நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.