கேரளாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த கேரளாவைச் சேர்ந்த பழங்குடிப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதற்காக கேரள அரசுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதண்யா சுரேஷ் , பழங்குடி சமூகத்தில் இருந்து முதன் முதலில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார்.
2019 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீதண்யா சுரேஷ், பயிற்சிக்குப் பின்னர், தற்பொழுது கோழிக்கோடு உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஸ்ரீதண்யா சுரேஷ் கூறுகையில், கொரோனா தொற்று காலத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம், நிர்வாகத் துறையை ஆழமாக கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டில், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையில் ஸ்ரீதாண்யா பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.