பேரூராட்சி அலுவலகத்தில் விஜய் பிறத்நநாளை கேக் வெட்டி கொண்டாடிய ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா பணியிடைநீக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியின் செயல் அலுவலராக ராஜா பதவியேற்று இரண்டு மாதமே ஆன நிலையில் கடந்த 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஊத்தங்கரையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திலேயே சக நண்பர்களுடன் பேனர் வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்.
அரசு அலுவலகத்தில் தனிப்பட்ட நபர் அல்லது அரசியல் கட்சியினரின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்பது வழக்கம்.
இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக கேள்விப்பட்டதில்லை. அதையெல்லாம் தாண்டி ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டாடிய போட்டோ மற்றும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.