அரசுப்பள்ளி மாணவர்களுக்கு-உள் இடஒதுக்கீடு

 



மருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்


அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்கிட, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கலையரசன் அவர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்தார்.


இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையைத் தயார் செய்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பித்துள்ளது.  இதன் அடிப்படையில்,  மருத்துவ படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க உள்ளது