குறுஞ்செய்திகள்


புதுச்சேரியில் ஊரடங்கிற்கு புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்கள் மூடப்படும். கடைகள், மதுபானக்கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.


புதிய கட்டுப்பாடுகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும்  எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் ரூ.200 அபராதம்


***********************


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.


*********************


தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.


_________________


டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. டெல்லியில் மேலும் 3000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2175-ஆக அதிகரித்துள்ளது.


டெல்லியில் மேலும் 3,000 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 59,746 ஆக உயர்வு


* கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33,013 பேர் குணமடைந்துள்ளனர் - சுகாதாரத்துறை


*******************


பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைத்து இரண்டு பெண்களை 32 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.


________________


லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவின் பிடிவாதத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனா மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி கொடுக்க அனைத்து வகையிலும் இந்திய துருப்புக்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு அடுத்துப் பாதுகாப்புத் துறைக்கு அவசரக்கால நிதியாக ரூ.500 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


எல்லை விவகாரத்தில் நரேந்திர மோடி அல்ல அவர் சரண்டர் மோடி எனக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.


____________________


தஞ்சை மாவட்டத்தில் அனுமதியின்றி மண், இதர கனிமம் எடுத்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை   - ஆட்சியர்


____________________


'வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்'


கோவை: வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்; மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை.  ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டது


____________________


2009 ஆம் ஆண்டு கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சயனைடு மோகன் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


____________________


உயர்கல்வி படிப்புகளில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு


* உயர்கல்வி பாடப்பிரிவுகளில் கொண்டு வந்துள்ள மாற்றம் மாணவர்களின் வாய்ப்புகளை குறைக்கிறது - தங்கம் தென்னரசு


______________________


கேரளாவைச் சேர்ந்த 28 வயதான கலால் அதிகாரி ஒருவர் இறந்த ஒரு நாள் கழித்து, மருத்துவமனை தன்னை அலட்சியமாக நடத்தியதாகப் பேசியிருந்த ஆடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.


_____________________