7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவர்களின் கருப்பு பேட்ஜ் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியராக பணிபுரிந்து, கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த, பிரிசில்லா குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக மருத்துவ கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
கொரோனா பாதிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை பெற தனி இடம் ஒதுக்கவேண்டும் வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க இன்று முதல் கூடுதலாக 1000 டாக்டர்கள்அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக மருத்துவ கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த சுகாதாரத்துறை, நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழக மருத்துவ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.