எல்லை பிரச்னை - குறுஞ்செய்திகள்


லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் பலி என ராணுவ வட்டாரங்கள் தகவல்


கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் பரபரப்பு தகவல்


சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்


இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம்


இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது


எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது


இந்திய எல்லைக்குள் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறப்பது அதிகரித்திருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல்


உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்திருப்பதாகவும் தகவல்


சீன துருப்புகள் ஊடுருவல் தொடர்பாக பிரதமர் இதுவரை வாய் திறந்து ஒருவார்த்தை சொல்லவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்