உலக தந்தையர் தினம்


இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.


மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.


உலகளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.


ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது.


மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.


அமெரிக்காவை சேர்ந்த சோனாரா ஸ்மார்ட் டோட்  என்ற பெண் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். அதனால் இவரின் தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார்.


இதன் காரணமாக தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. இவரது முயற்சியால் தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டுமுதல் ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.


1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர்.


1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன


தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் 


தந்தையர் தினத்திற்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தேதி நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.


பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ?
இல்லை இறைவனை நம்பி வ்ந்தாயோ?


தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் 


என்ற கண்ணதாசனின் பாடல் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் இந்த தந்தையர் தின நாளில்  சாதி, மொழி, மத பேதம் பார்க்காமல் அன்புடன்  ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


நாம்  நமது தந்தை தாயை மட்டும் அல்லாமல் வயதில் மூத்த உறவுகளை பாசத்துடன் நடத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்


தொகுப்பு வணக்கம் மோகனா செல்வராஜ்