ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று!
வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ராயபுரத்தில் உள்ள காப்பகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு 55 சிறுவர்கள் தங்கி இருந்த நிலையில் அதில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.